“இன்று காலை 9 மணி டூ இரவு 7.45 மணி வரை”… பல எதிர்ப்புகளுக்கு நடுவே கரூர் செல்லும் முதல்வர் விஜய்… கரூர் பயணத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்?…அதிர வைத்த விஜய்யின் முடிவு…!

By Visaka on ஆடி 10, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறவும், புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் இன்று கரூர் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கரூர் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த விசிட்டின் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

முதலமைச்சரின் இன்றைய அதிகாரப்பூர்வ பயணத்திட்டம் காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அவரது நீலாங்கரை இல்லத்தில் இருந்து தொடங்குகிறது. காலை 9.20 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர், 10.30 மணியளவில் திருச்சி வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து நண்பகல் 12.15 மணிக்கு கரூரில் நடைபெறும் ஆறுதல் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதிய உணவிற்குப் பிறகு, மாலை 3 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு திட்டத் தொடக்க விழாக்களில் கலந்துகொள்கிறார்.

   

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மாலை 4.10 மணியளவில் கரூரிலிருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்குப் புறப்படுகிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பும் முதலமைச்சர் விஜய், இரவு 7.45 மணியளவில் தனது நீலாங்கரை இல்லத்தை வந்தடைவதோடு இந்த கரூர் பயணம் நிறைவடைகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் சென்னை மற்றும் திருச்சியைத் தாண்டி அவர் மேற்கொள்ளும் இந்த முதல் மாவட்டப் பயணம், அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.