குஷியோ குஷி… “ஆகஸ்ட் முதல் மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை”…. காலையிலேயே அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

தேசியத் தலைநகர் டெல்லியில் 21 முதல் 60 வயது வரையிலான தகுதியான 20 முதல் 22 லட்சம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ₹2,500 வழங்கும் ‘டெல்லி லக்ஷ்மி யோஜனா’ (மகிளா சம்ரிதி யோஜனா) திட்டத்தை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ₹5,110 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் நேரடி பணப்பரிமாற்றம் (DBT) மூலம் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாட்டில் தற்போது ₹1,000 உரிமைத் தொகை தடையின்றி வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி அதனை ₹2,500 ஆக உயர்த்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், திட்டப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவொரு நீண்ட நடைமுறை என்பதால் இதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதியளித்துள்ளார்.