“அண்ணி காட்டும் கறார்.. அதிரும் அறிவாலயம்”… 20 + 1 கொடுத்த கூட்டணிக்கு ஓகே ….. கனிமொழி – பிரேமலதா ரகசிய டீல்…!

By Nanthini on தை 30, 2026

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளதை இது காட்டுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 15 முதல் 20 சட்டசபை தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா இடத்தையும் தேமுதிக எதிர்பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்கிய தேமுதிக, தனது பலத்தை நிரூபிக்க இத்தனை இடங்களை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால், திமுக தரப்போ அதிகபட்சமாக 5 அல்லது 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, ராஜ்யசபா சீட் வழங்குவதற்கு திமுக தரப்பு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. 5 அல்லது 6 தொகுதிகளுக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும், இல்லையெனில் தேமுதிகவை விடுத்து தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

இருப்பினும், இந்தச் செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ள கனிமொழி எம்பி, தான் யாருடனும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மறுத்துள்ளார். கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே அறிவிப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தேமுதிகவின் பிடிவாதமான கோரிக்கைகளால் அந்த கட்சிக்குச் சரியான கூட்டணி அமையுமா அல்லது தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.