சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கூறியதாவது, நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் செய்திருக்கேன் தர்மம். இது வெளியே தெரிய வேண்டும் என்கிற தேவை எதுவும் இல்லை. அமெரிக்கா போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்து இன்னிக்கு மைக் முன்னாடி நின்னு நான் பேசறேன்னா அதுக்கு காரணம் தர்மம். நான் சேர்த்து வைத்த புண்ணியம். அதுதான் கடைசியாக போகும் அந்த புண்ணியம்தாவ் கூட போகும்.
அந்த புண்ணியத்தை தான் என் மகன் சிம்புவுக்கு நான் கத்துக் கொடுத்தேன். சின்ன வயசுல நான் தியேட்டர்காரங்க கிட்ட வாங்கிய பணத்தை எல்லோரும் அள்ளிக் கொடுக்கறதை என் பையன் சிம்பு பார்த்துட்டே இருக்கான். என்கிட்ட வந்து எல்லோருக்கும் பணம் கொடுக்கறியே? எனக்கு பணம் தருவியான்னு கேட்கறான். அந்த பை நிறைய பணம் இருக்குதுன்னான். எடுத்துக்கோ என்று சொன்னேன்.
இந்த பணத்துக்கு சாக்லேட் வாங்க போறியான்னு கேட்டேன். இல்லே, நீங்க எல்லாருக்கும் கொடுத்தீங்க இல்லே, அதே மாதிரி நானும் கொடுக்க போறேன்னு சொன்னான். சரின்னு நான் உள்ளே போயிட்டு கதவு வழியா பார்க்கறேன். அவன் எல்லோருக்கும் அப்படியே எண்ணிக்கூட பார்க்காம பணத்தை கட்டு கட்டா எடுத்துக் கொடுக்கறான். அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன். இது கற்பனையல்ல. நடந்த நிஜம் என்று டி ராஜேந்தர் கூறியிருக்கிறார்.
