நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன். தெலுங்கில் முன்னணி நடிகர். தஞ்சாவூரில் நிருபர்களை சந்தித்த அவர் தேர்தல் குறித்து கூறியதாவது, எலக்சன் வரைக்கும் மக்கள் ஒரு யோசனையில் இருப்பாங்க. ஒரு முடிவில் இருப்பாங்க… தேர்தல் நேரத்துல ஒரு வாரம் 5 நாள் முன்னாடி திடீர்ன்னு ஒரு அறிக்கை வந்தால் அவங்க முடிவை மாத்திக்குவாங்க. அதே மாதிரி கூட்டத்தை பார்த்து நாம் ஒரு கணக்கு போட முடியாது. கூட்டம் இருப்பதால் ஒருவர் ஜெயிப்பார் என்றும் சொல்ல முடியாது.
நடிகர்களுக்கு வருகிற மக்கள் கூட்டம் எப்படி என்றால், திரையில் பார்க்கிற மாதிரி நேரிலும் இருப்பாரா? லேடீஸ் எப்படி இருப்பாங்க. கருப்பா வெள்ளையா ஒல்லியா குண்டா எப்படி இருப்பாங்க? இதை பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்குது. இதை எல்லாம் தாண்டி கேஸட் இருக்குது, கம்யூனிட்டி இருக்குது, ஒரிஜினல் குவாலிட்டீஸ் என்று நிறைய இருக்குது. கூட்டணி முடிவுகள் எல்லாம் வந்த பிறகு எது எது எல்லாம் எப்படி எப்படி மாறும் என்று எதுவும் இப்போது சொல்ல முடியாது.
இளைஞர்கள் ஒரு மாதிரி மிடில் ஏஜ் மக்கள் ஒரு மாதிரி சீனியர் சிட்டிசன்ஸ் வயதானவர்கள் ஒரு மாதிரி இதில் யோசிப்பாங்க. இந்த அரசாங்கம் வருவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசிப்பவர்களும் இருப்பார்கள். அதனால் எதையும் இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்று நடிகர் சுமன் கூறியிருக்கிறார்.
