ஜிம்மில் சூர்யா-ஜோதிகா ஒன்னா சேந்து ஒர்க்அவுட் பண்ணதே அதுக்கு தானாம்.. அடேங்கப்பா, செம்ம பிளான்-ஆ இருக்கே..!

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படம் தான் சூர்யா மற்றும் ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்த முதல் திரைப்படம். 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இளம் காதல் ஜோடியாக நடித்த இவர்களின் நடிப்பு ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.அதன் பிறகு இருவரும் ஜோடியாக உயிரினிலே கலந்து, காக்க காக்க,பேரழகன்,மாயாவி, ஜூன் 6,

   

ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியான 2 நாட்களில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வந்த ஜோதிகா 36 வயது வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பைக்கு சென்று செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

அங்கு சென்றதிலிருந்து ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் ஜோதிகா அவருடைய கணவர் சூர்யாவுடன் இணைந்து ஒர்க்அவுட் செய்திருந்த வீடியோ படு வைரளானது. இப்படி இவர்கள் இருவரும் ஒர்க்கவுட் செய்வதற்கு பின்னால் உள்ள காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இதனை ஒரு பெண் இயக்குனர் இயக்கப் போகிறார் என்று கூறப்படுகின்றது. அவர் யார் என்றால் சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தை இயக்கிய அனிகா ஷர்மா மற்றும் பெங்களூர் நாட்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் ஆகியோரிள் யாராவது ஒருவர் தான் இப்படத்தை எடுக்க போகிறார்கள் என கூறப்படுகின்றது. இதனை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

author avatar
Mahalakshmi