நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கிய தனது 46வது படத்தை தொடர்ந்து அடுத்து தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு சூர்யா 47 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மலையாளத்தில் ஆவேசம் என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.
இந்த படத்தை நடிகர் சூர்யா தனது ழகரம் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நஸ்லின் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பிரமோவுக்கான படப்பிடிப்பு சில தினங்களாக கேரளாவில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா போலீஸ் கெட்டப்பில் வந்து கலந்து கொண்டார். சிங்கம் படத்துக்கு பிறகு மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சூர்யா இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி…