தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்குரா கூட்டணியில் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தொடர்பான டைட்டில் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது. சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
தேசிய விருது, ஆஸ்கார் நாமினி என மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் மீண்டும் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது சூர்யாவின் 43வது திரைப்படத்தை சுதா கொங்குரா தான் இயக்கப் போகிறார் என்று தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் முழு பெயரை அறிவிக்காமல் வெறும் புறநானூறு என்று பாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலே இது தானா இல்லை மீதி எதுவும் இருக்கின்றதா என்று பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
2d என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல் விஷயங்களும் இருக்கின்றது. அதாவது இந்த திரைப்படம் ஜிவி பிரகாஸுக்கு 100வது திரைப்படம். அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா தமிழில் நடிக்க இருக்கிறார். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கின்றது.