ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அனியானது மூன்று போட்டிகள் கொன்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஒரு நாள் தொடர் தான் ரோகித்- விராட் கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில் கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை சுக்கு நூறாக உடைத்து விட்டார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, விராட் – ரோகித் சர்மாவை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்து விடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டே போட்டிகள் திடீரென்று எல்லோரும் விமர்சகர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் கூச்சலை கேட்டார்கள். ஆனாலும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பேட்டை பேச வைத்தார்கள். ஏனென்றால் ரோகித்- விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…
ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…