அன்பே சிவம் படத்தை முதலில் இயக்க இருந்ததே இவர்தான்… கடைசி நேரத்தில் சுந்தர் சி க்கு அடித்த ஜாக்பாட்!

By vinoth on டிசம்பர் 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனி பல்கலைக்கழகமாக விளங்கியவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

   

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். அப்படிதான் கமர்ஷியல் படங்களாக இயக்கி வந்த சுந்தர் சி தன்ன்னுடைய அன்பே சிவம் படத்தை இயக்க வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இன்றளவும் ஒரு நல்ல படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

   

 

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என சொல்லப்படும் சுந்தர் சி தான் இந்த படத்தை இயக்கினார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அவர் திரை வாழ்க்கையிலேயே மிக வித்தியாசமான படமாக அன்பே சிவம் அமைந்திருக்கும். அவர் இயக்கிய எத்தனையோ படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் வணிக ரீதியாக தோல்வியடைந்த இந்த படம்தான் அவருக்கு பெருமை சேர்த்த படமாக எந்நாளும் இருக்கும்.

ஆனால் இந்த படத்தை இயக்க முதலில் கமல் நியமித்தது சுந்தர் சி யை அல்ல.   அன்பே சிவம் படத்தை முதலில் இயக்க இருந்தது மலையாள இயக்குனரான பிரியதர்ஷன்தான். ஆனால் அவர் கடைசி நேரத்தில் இந்த படத்தில் இருந்து திடீரென விலக, அப்போதுதான் சுந்தர் சி யை வைத்து இயக்கலாம் என்ற முடிவை கமல் எடுத்துள்ளார்.