தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக படம் எடுக்கும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். தயாரிப்பாளரிடம் எவ்வளவு பட்ஜெட் என்று சொன்னாரோ அதைவிட குறைவாகத்தான் படத்தை முடித்துக் கொடுப்பார். அதனைப் போல எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்று சொன்னாரோ அதைவிட குறைவான நாட்களில் படத்தை முடித்து விடுவார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி அவரை வைத்து சில மாதங்களில் படப்பிடிப்பை முடித்து விடுவார். இதன் காரணமாகவே அவரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கோலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வரும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான்.

இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் இன்றும் பலருடைய ஃபேவரை திரைப்படமாக உள்ளது. பொதுவாக சுந்தர் சி திரைப்படம் என்றாலே காமெடி கலந்த காதல் கதை இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற நம்பிக்கையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார். ரஜினி, கமல், அஜித், கார்த்திக் மற்றும் விஷால் என பலரையும் வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் நடிக்காத நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான். விஜயை வைத்து பலமுறை படம் எடுக்க முயற்சி செய்தும் சுந்தர்சியால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகவும் சுந்தர் சி நடித்த தொடங்கினார்.

பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தில் நான்கு பாகங்களும் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அரண்மனை 5 படத்தை எடுக்க உள்ளார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் அம்மன் வேதத்தில் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு வடிவேலுவுடன் இணைந்த சுந்தர் சி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் கார்த்தியிடம் சுந்தர் சி ஒரு கதை சொல்லி உள்ள நிலையில் கதை பிடித்து இருந்ததால் கார்த்தி ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் கார்த்தி கையில் நிறைய படங்கள் இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க எனக்கு மூன்று மாதங்கள் மட்டும் கால் சூட் கொடுங்கள் படத்தை முடித்து விடுகிறேன் என்று சுந்தர் சி கூறியதால் கார்த்தி உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கும் எனவும் 2026 பிப்ரவரி மாதம் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தற்போது சுந்தர்சியுடன் இணைந்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்தப் படத்தை முடித்த கையோடு கார்த்தியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.
