FLASH NEWS: விஜய் அரசுக்கு வந்த ஆபத்து.. ரூ.35 கோடி பேரம்…. மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அனுப்பியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்திற்குச் சென்ற போலீஸார், அவரது தந்தையிடம் சம்மனை ஒப்படைத்து, எதிர்வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அதிரடி சம்மன் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பதற்றத்தையும் பரபரப்பையும் தொற்றிக்கொள்ளச் செய்துள்ளது.