காவலாளி அஜித்குமார் காவல் லாக் அப் மரண வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காவலாளி அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் சிபிஐ வசம் உள்ளது. இந்த நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில் திடீர் திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
