பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் விஜய்யும், படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகை த்ரிஷாவும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ரேஸ் களத்தில் அஜித்தை நேரில் சந்தித்துக் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் விஜய், அங்கு வந்த த்ரிஷாவை பார்த்ததும் அவரிடமிருந்து சட்டென தள்ளி நகர்ந்து சென்றது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரிலேயே த்ரிஷா அங்கு வந்ததாகவும், ஆனால் விஜய்யும் த்ரிஷாவும் வழக்கம் போலப் பேசிக்கொள்ளாமல் தூர விலகியே நின்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேமராக்களைக் கண்டதும் முதல்வர் விஜய் உடனடியாக நகர்ந்து சென்றாரா அல்லது இருவருக்கும் இடையே நிஜமாகவே பேச்சுவார்த்தை இல்லையா எனச் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலவிதமான வதந்திகள் கொளுத்திப் போடப்பட்டு வருகின்றன. இந்த வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
