தவெக-வை ஆட்சி அமைக்க உடனே கூப்பிடுங்க… இல்லன்னா என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணிய சுவாமி..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறைப்படி அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது வாதமாக உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விவகாரத்தில் எவ்விதத் தாமதமும் இன்றிச் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் தீர்ப்பை மதித்து விஜய்க்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை ஆளுநர் இதில் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது காலதாமதமாகவோ செயல்பட்டால், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை எட்ட தான் நீதிமன்றத்தை அணுகத் தயங்கமாட்டேன் என்றும் சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

சுப்பிரமணிய சுவாமியின் இந்த ஆதரவு ஒருபுறம் இருக்க, தவெக தரப்பும் சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. ஆளுநர் அழைப்பு விடுக்காத பட்சத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தை நாட அக்கட்சி முடிவு செய்துள்ளது. “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” என்ற அந்தத் தீர்ப்பின் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உரிமையை நிலைநாட்ட விஜய் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.