தமிழகத்தை பொறுத்தவரையில் பொது போக்குவரத்து சிக்கல்கள் மீண்டும் வெளிப்படையாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வைரல் வீடியோ மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோ மதுரையில் நடந்த நிகழ்வை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்தில் இடம் கிடைக்காமல் பல பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பேருந்து நெரிசலால் மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு கட்டத்தில் அருகில் சென்று ஆட்டோ இடித்து கீழே விழும் அபாயகரமான நிலையும் உருவானது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் போதிய பேருந்து வசதி இல்லாததையும் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதையும் இந்த வீடியோ வெளிகாட்டுகிறது. பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த வேண்டுமென பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
