மும்பையில் உள்ள மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின் போது, ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சாஹில் வக்கோடே என்பவர் தனது கைபேசி மூலம் வினாத்தாளை சாட்ஜிபிடி தளத்தில் பதிவேற்றி விடைகளைத் தேடியதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டபோது பிடிபட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் மாணவரிடம் ஆலோசனைகள் வழங்கி, இந்தச் சம்பவம் அவரது கல்வியையோ அல்லது எதிர்காலத்தையோ பாதிக்காது என்று கூறி அனுப்பி வைத்ததாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், விடுதி அறைக்குத் திரும்பிய அந்த மாணவர் சிறிது நேரத்தில் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்தார்.
இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், ஐஐடி மும்பை வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிடிபட்ட மாணவருக்கு ஒரு ஆண்டு இடைநீக்கம் விதிக்கப்படும் என்று நிர்வாகம் மிரட்டியதாகவும், அந்த பயத்தினாலேயே அவர் இத்தகைய தீவிர முடிவை எடுத்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி, நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…