தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 10 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வந்த டெல்லி போலிஸார், தற்போது நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
அந்தக் குற்றப்பத்திரிகையில், குற்றவாளி சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய உடனே கொல்லாமல், சிறிது நேரம் கழித்து கொடூரமாகக் கொலை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 25 வயதான இந்தக் குற்றவாளி மீது கடந்த 2015 முதல் 2022 வரை கலவரம், பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை முயற்சி உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு உரிய தண்டனை கிடைக்காததே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் எனச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…