வகுப்பறையில் காதலியோடு வீடியோ கால்… “எவ்வளவு சொல்லியும் கேட்கல” திடீரென மயங்கி விழுந்த மாணவனால் அதிர்ச்சி…!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் சாக்கோ. 20 வயதான இவர் தன்னுடைய உறவினரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த அவர் புகார் அளித்துவிட்டு திடீரென்று காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் கேட்ட பொழுது கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்து பினாயில் மற்றும் எலி மருந்து கலந்து குடித்து விட்டதாக கூறியிருக்கிறார்

இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். பிறகு இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் படித்து வந்த மாணவன் ஜான் சாக்கோ வகுப்பறையிலேயே தான் காதலிக்கும் பெண்ணிடம் செல்போனில் வீடியோ கால் பேசியதால் இது குறித்து பேராசிரியர்கள் கண்டித்த நிலையில் மீண்டும் அதேபோல அவர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளஓரிக்கு வரக்கூடாது எனவும் வீட்டிலிருந்தே தேர்வு எழுமாறும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து தற்போது மூன்றாம் ஆண்டு படிப்பதற்காக கல்லூரிக்கு வந்தபோது உள்ளே அனுமதிக்காததால் அவர் பினாயில் மற்றும் எலி மருந்து குடித்துவிட்டு காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் மீது புகார் அளிக்க வந்தபோது மயங்கி விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.