“என் பிள்ளை படிக்க 20 லட்சம் கட்டினேன்” ஆனா அவன் உயிரே போயிடுச்சே.. கல்லூரி மைதானத்தில் பலியான மகன்: கதறும் தந்தை..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் வர்மா என்ற 20 வயது மாணவர், புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் மரைன் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, கல்லூரி வளாகத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த கூடைப்பந்து (Basketball) கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஷால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது மகனை ஒரு சிறந்த பொறியாளராக மாற்ற வேண்டும் என்ற கனவோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை தந்தை பாபுராம் வர்மா கட்டணமாகச் செலுத்தியுள்ளார். “எந்தக் கல்லூரியில் என் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பினேனோ, அதே கல்லூரி இன்று அவனது கல்லறையாக மாறிவிட்டது” என்று அவர் கதறி அழுவது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் இருந்த அந்த இரும்புக் கம்பம் சரியாகப் பராமரிக்கப்பட்டதா அல்லது அதன் உறுதித்தன்மையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்து மாணவர்களிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. ஒரு திறமையான மாணவன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

7 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

8 மணத்தியாலங்கள் ago