விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சா புரத்தில் வசித்து வருபவர் கர்ணன். இவருடைய மகன் மாரீஸ்வரன். 21 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் பொறியியல் படித்து வந்துள்ளார். தங்கும் விடுதி ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலமாக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரை சந்திப்பதற்கு மாரீஸ்வரன் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டா.ர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
மேலும் மாணவரின் அறையில் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்பொழுது நோட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கி உள்ளது .அதில் அறியாமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் தனக்கு தொடர்ந்து பாலில் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், அதை வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளதாகவும், தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறித்ததோடு தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் அவர்கள் பறித்ததாக குறிப்பிட்டு மனவேதனையை தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினால் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் இளங்கோவன்(20) அவருடைய நண்பர்கள் பாண்டீஸ்வரர், பவித்ரன், முத்துராஜா, ஆண்டனி, சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஆளும் திமுக அரசுக்கு எதிராகக்…
குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை…
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…