விசாகப்பட்டினம் எம்.பி.வி காலனியை சேர்ந்தவர் சூரி பாபு. ஆட்டோ டிரைவர் ஆன இவருடைய மூத்த மகன் சாய் தேஜா. 22 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். இவர் மற்ற மாணவர்களோடு போட்டி போட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். வகுப்பில் சாய் தேஜா முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்துள்ள நிலையில் புள்ளியல் துறை பேராசிரியர் ஒருவரும் வகுப்பு பேராசிரியை ஒருவரும் சாய் தேஜாவை தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .தங்களுடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
பேராசிரியர்கள் இரண்டு பேரும் சாய் தேஜாவின் whatsapp எண்ணிற்கு ஆபாச ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி உள்ளார்கள் . இது குறித்து சாய் தேஜா தன்னுடைய பெற்றோரிடம் கூறிய நிலையில் சாய் தேஜாவின் தந்தையும், மாமாவும் கல்லூரிக்கு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்கள். இதற்கிடையில் இதை அறிந்த பேராசிரியை வீட்டில் இருந்து சாய் தேஜாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சாய் தேஜா செல்போனில் ஆடியோ பதிவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து போலீசார் சாய் தேஜாவின் செல்போனை பறிமுதல் செய்துள்ளார்கள். பேராசிரியர்கள் மாணவருக்கு அனுப்பி ஆபாச பாடங்கள் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…