சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவில் சிறிய பொருட்களை மட்டும் தான் திருடுவார்கள். ஆனால் தற்போதயெல்லாம் பெரிய பொருட்களை திருடி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் மிகப்பெரிய யானையை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் ராசியிலிருந்து ஜெயமதி என்ற பெண் யானையை 40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பகுதியில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அந்த யானை திடீரென்று மாயமானது. இது தொடர்பாக உடனே அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து யானையைத் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை 27 லட்சத்திற்கு விற்றதாக ஜார்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதேநேரம் யானையை திருடிவிட்ட கும்பலை போல போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
