உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மனைவி, சொந்த தந்தை முகேஷ் சிங்கல் (55), தாய் பிரபா தேவி ஆகியோரை கொலை செய்து 50 கோடி உயிர் காப்பீடு பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான விஷால் சிங்ஹால் என்ற நபர் முன்னதாகவே 1.5 கோடி ரூபாய் காப்பீடு பெற்ற இலையில் மேலும் காப்பீடு கோரிய போது அவருடைய நான்காம் மனைவி ஏற்கனவே இறந்தவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக போலீசில் புகார் தெரிவித்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார் சாம்பலில் 11 மாநிலங்களில் போலி விபத்து மோசடி விசாரணை விஷாலின் செயல்களுடன் ஒத்துப் போவதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்துகையில் தனது தந்தையின் 50 கோடி காப்பீட்டு தொகைக்காக தந்தை, தாய் மற்றும் முதல் மனைவியை கொலை செய்து நாடகம் நடத்தியது கண்டறியப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு சாம்பல் எஸ் பி கிருஷ்ண காந்த், கண்காணிப்பு வங்கி பதிவுகளால் விஷால் விபத்துகளை திட்டமிட்டு செய்ததை உறுதிப்படுத்தினார்.
பல மோசடிகளையும் மூன்று குறைகளையும் செய்த விஷால் மற்றும் அவருடைய உளவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நான்காம் மனைவி ஸ்ரேயாவின் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சுற்று சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்சூரன்ஸ் தொகைக்காக சொந்த பெற்றோரையே வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
