தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டபடி, வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ்-2 தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 நிதி உதவி வழங்கப்பட உள்ளது. முன்னதாக, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் சுமார் 69,000 இளைஞர்களுக்கு, முந்தைய திட்டங்களின் கீழ் தகுதிக்கு ஏற்ப மிகக் குறைவாக மாதந்தோறும் ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய அரசின் இந்த அதிரடி உத்தரவின் மூலம், இந்த நிதியுதவி பல மடங்கு உயர்த்தப்பட்டு நேரடியாக தகுதியுள்ள இளைஞர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளதால், தமிழக வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…