தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் அவர்கள் தனது அமைச்சரவைக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை உடனடியாகக் கூட்டி, பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டங்களை நிறைவு செய்த பின்னர், அந்தந்த துறைகளின் தற்போதைய கள நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கான நற்பணிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தொய்வின்றி, மிக விரைவாகச் செயல்படுத்தி மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு, புதிய அரசின் நிர்வாகப் பணிகளைத் தற்போதே வேகம் எடுக்க வைத்துள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…