மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் உருவத்தை தச்சாக வடிவமைத்து, அவர் கணபதி பாப்பாவை கையில் ஏந்தி நிற்பது போன்ற சிலை அமைப்பை உருவாக்கியுள்ளார். சுமார் மூன்று மாத கடின உழைப்பில் தனது வீட்டில் உருவாக்கிய இந்த கலைப்படைப்பு, அஜித் பவாரின் நினைவுகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சதுர்த்தி அமைப்பில், அஜித் பவார் கையில் விநாயகர் சிலையுடன் இருக்கும் பிரதான சிலைக்கு அருகே, அவர் உயிரிழந்த விமான விபத்தின் மாதிரிக் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோகமான விபத்து காட்சியை ஆன்மீக மற்றும் பண்டிகைக் காலத்தில் காட்சியாக வைத்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளிடையே கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. பண்டிகை காலத்தில் விபத்து காட்சியை தவிர்த்திருக்கலாம் என சிலர் விமர்சித்தாலும், அஜித் பவாரின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் இதனை ஒரு உணர்வுப்பூர்வமான அஞ்சலியாகப் பார்க்கின்றனர்.
