சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி இன்றுடன் நிறைவடடைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்ட 11 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகள் ஏற்கெனவே முழுமையாக முடிவடைந்துள்ளன.
தற்போது எஞ்சியுள்ள 2 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் சரிபார்ப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட VVPAT இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடுகளோ அல்லது தொழில்நுட்பக் குளறுபடிகளோ கண்டறியப்படவில்லை
