நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை நள்ளிரவில் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஐந்து விசை படகுகள், மீன்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.
