தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றைய செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும்.. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் எட்டு பேர் மற்றும் மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் காந்தமல்லி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
