மாமன் மகனுடன் கள்ளக்காதல்… நேரில் பார்த்த தாய்… 8 மாதங்களுக்குப் பிறகு… செப்டிக் டேங்கில் மிதந்த எலும்புக்கூடு… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது நடைபெறக்கூடிய கொடூர கொலைகள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிதான் தென்காசி மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவர் கோவையில் வேலை பார்த்து வந்த தன்னுடைய கணவரை விட்டு எதிர் வீட்டில் வசித்த மாமன் மகன் மாடசாமி உடன் உறவு வைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்ததை மாடசாமியின் தாய் கண்டித்தும் பேச்சியம்மாள் கணவர் அதனை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டார். மாடசாமி பேச்சியம்மாளை தன்னுடைய குடும்பத்தை விட்டு தன்னுடன் வரும்படி வலியுறுத்தினார்.

ஆனால் பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு பேச்சியம்மாள் வீட்டில் இருவரும் தனியாக இருந்த சமயத்தில் மாடசாமியை நாற்காலியில் கட்டி தலையணையால் அமுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தை மறைப்பதற்காக பேச்சியம்மாள் தன்னுடைய தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன் மாடசாமியின் உடலை வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் தள்ளி உள்ளார்.

   

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு வீட்டு உரிமையாளர் பழுது பார்க்க வந்த சமயத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது பேச்சியம்மாள் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.