பிரைவேட் ஸ்கூலுக்கு இனி ‘NO’ சொல்லுங்க…! ஜனவரி 19 முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…! அதிரடி காட்டும் தமிழக அரசு…!!

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் நடத்தும் சுமார் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியானது வரும் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மண்டல அளவில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஒருங்கிணைக்கும் இந்தப் பயிற்சியானது, ஆசிரியர்கள் அங்கேயே தங்கிப் பயிலும் ‘உண்டு உறைவிடப் பயிற்சியாக’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்களது பாடப்புத்தகங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய நாட்களில் பணி விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக ஆங்கிலப் புலமை பெற வேண்டும் என்பதே இந்த மெகா பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

Devi Ramu

Recent Posts

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

26 minutes ago

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

30 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

34 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

38 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

46 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

52 minutes ago