தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 6 நாட்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2097 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 22,797 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 11,290 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்தும், இசிஆர் வழியாக காஞ்சிபுரம் மற்றும் பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழகத்தில் மட்டும் மொத்தம் 34,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…