என்னது முதல் மரியாதை படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபலம் தானா?.. பாரதிராஜா கேட்டும் நடிக்க மறுத்த அவர் யார் தெரியுமா..?

By Nanthini on சித்திரை 1, 2025

Spread the love

தமிழ் சினிமா திரையுலகில் 80 மற்றும் 90 கால கட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுபூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கின்றது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தை பெற்றுள்ளன. அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ள திரைப்படங்களில் ஒன்றுதான் முதல் மரியாதை. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முதல் மரியாதை.

முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த  பாரதிராஜா..!

   

இந்த திரைப்படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்த நிலையில் படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ் மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருந்தது. இளையராஜாவின் இசையும் வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது.

   

படம் ஓடுமா என முதல் மரியாதை திரைப்படத்தை விமர்சித்த பிரபலங்கள்..! கோபத்தில்  வார்த்தையை விட்ட சிவாஜி கணேசன்..! | tamil360newz

 

இந்தத் திரைப்படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா திரைப்படமாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தான். முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த கதாபாத்திரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Did You Know Legendary SP Balasubrahmanyam Was The First Choice for Muthal  Mariyathai? | Astro Ulagam

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படம் உருவான காலகட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த எஸ் பி பி தினம்தோறும் 15 முதல் 20 பாடல்கள் வரை பாடிக் கொண்டிருந்தார். அந்த காரணத்தால் அப்போது படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். இந்த படத்தில் எஸ்பிபி நடிக்கவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற பூங்காற்று திரும்புமா என்ற பாடலை அவர் தான் பாடியிருந்தார். ஆனால் அந்த பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. இறுதியாக மலேசியா வாசுதேவன் பாடியது தான் படத்தில் இடம் பெற்றிருந்தது.