தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின் உரை மிகவும் நன்றாக இருந்ததாக அவர் வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய்யின் பேச்சை அதிமுக தலைமை கடுமையாக விமர்சித்துள்ள இச்சூழ்நிலையில், வேலுமணியின் இந்த வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, புதிய நடுவர் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். ஆனால், அந்த சமயத்தில் எஸ்.பி. வேலுமணி மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையிலேயே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
