பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், வெறும் 100 ரூபாய் பணத்திற்காகப் பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமபரோஸ் ராவத் என்ற நபர், தனது தாய் சுமித்ரா தேவியிடம் மது அருந்துவதற்காக 100 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், தாயிடம் பணம் இல்லாததால் கொடுக்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற மகனைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், குடிபோதையில் இத்தகைய பாதகத்தைச் செய்திருப்பதும் தெரியவந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மகனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் 100 ரூபாய்க்காகத் தாயின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…