‘புன்னகை அரசி’ சினேஹாவின் மாடர்ன் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்….கணவர் என்ன சொன்னாருன்னு தெரியுமா?…நீங்களே பாருங்க….

By Begam

Updated on:

நடிகை சினேகா மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. தமிழில் இவர் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

   

 

தமிழை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காகவே நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார். தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.இந்நிலையில் தற்போது சினேகா மாடர்ன் உடையில் அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை பார்த்த அவரது கணவர் பிரசன்னா ‘அழகி’என கமெண்ட் செய்துள்ளார்.தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.