‘முத்து மணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட’ நடிகை வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…..

By Begam

Updated on:

நடிகை வனிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண தியேட்டருக்கு கழுத்து நிறைய முத்து மணி மாலை அணிந்து வெள்ளை நிற உடையுடன் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்றே கூறலாம். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

   

இதையெல்லாம் கடந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் கை தேர்ந்தவரான நடிகை வனிதா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆனார்.

இதைத் தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி  அதில் சமையல், மேக் டிப்ஸ் குறித்த விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை காண தியேட்டருக்கு கழுத்து நிறைய முத்து மணி மாலை அணிந்து வெள்ளை நிற உடையுடன் சென்றுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘முத்து மணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட’என்ற பாடல் வரியை கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….