சென்னையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தொடர்ந்து பல நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சென்னையில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி வருகின்றது.
இதனை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் சில கோடிகள் தேவைப்படுகின்றது. இதற்காக நிதியை திரட்ட முடிவு செய்திருந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து அனைத்து நடிகர்களிடம் உதவி கோரி வருகிறார்கள். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் என தொடர்ந்து பல நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு பண உதவி வழங்கி வருகிறார்கள்.
அதிலும் நாசர் மற்றும் கார்த்திக் முழு முயற்சியுடன் ஈடுபட்டு அனைத்து நடிகர்களிடமும் நிதி திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.
Actor #Sivakarthikeyan donated Rs 50Lakh from his personal fund towards the construction of New Nadigar Sangam Building.
He handed the cheque to South Indian Artistes' Association President M.Nasser and Treasurer Si.Karthi.#NadigarSangam #siaa@actornasser @VishalKOfficial… pic.twitter.com/vGfoTURb0t— Ramesh Bala (@rameshlaus) April 23, 2024
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் நடிகர் சங்க பொது கட்டிட பணிகளை தொடங்குவதற்காக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் 50 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு நாசர் மற்றும் பொருளாளர் கார்த்திக்கிடம் வழங்கி இருக்கிறார் என நாசர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.