திரையுலகில் சிலர் என் வளர்ச்சியை தடுக்க நினைக்குறாங்க… நான் போட்டி போட வரவில்லை… சிவகார்த்திகேயன் முன்வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டு…!

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன்  தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், தனது திரைப்பயணம் மற்றும் தற்போது அவர் சந்தித்து வரும் சவால்கள் குறித்து மிகவும் உருக்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார். திரையுலகில் தனக்கு எதிராக நிலவும் சில சூழல்களை அவர் சுட்டிக்காட்டிய விதம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது உரையின் போது, “நான் திரையுலகில் யாருடனும் போட்டி போட வரவில்லை; யாரையும் குறை சொல்லவோ அல்லது தாக்கிப் பேசவோ எனக்கு எப்போதுமே விருப்பமில்லை” என்று சிவகார்த்திகேயன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சினிமாவில் அர்த்தமுள்ள மற்றும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் உழைத்து வருவதாகவும், அத்தகைய நல்ல முயற்சிகளைத் தொடர தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையோரிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் எப்போதும் தன் மீது மாறாத அன்பு கொண்டு தனக்குப் பேராதரவு அளித்து வருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இருப்பினும், திரைத்துறையில் இருக்கும் சில நபர்கள் மட்டும் தனக்கு ஆதரவாக இல்லை என்றும், அவர்கள் தனது வளர்ச்சியைத் தடுக்க நினைப்பதாகவும் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார். சிவகார்த்திகேயனின் இந்த நேரடியானப் பேச்சு, கோலிவுட் வட்டாரத்தில் அவர் எதிர்கொள்ளும் மறைமுக நெருக்கடிகளைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

18 minutes ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

25 minutes ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

29 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

29 minutes ago

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

45 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

48 minutes ago