சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 50 கோடி வசூல் செய்த படமா மான் கராத்தே படம் அமைந்தது. அதன் அடுத்து இவருடைய ரெமோ படம் 25 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.
ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவக்கார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்துவிட்டார். தற்போது சுதா கொங்கர இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தவரும் எஸ்கே 23 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடித்துள்ள நேசிப்பாயா என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். நேற்று இரவு நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.