Connect with us

CINEMA

SK, திடீரென தனது நற்பணி மன்ற ரசிகர்களை சந்தித்தது ஏன்.? ஒருவேளை அது உண்மை தானோ..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி  பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து போஸ்ட் புரொடக்சன் தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

   

அதற்கு அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருந்த நிலையில், சிவகார்த்திகேயன் அவர்கள் திடீரென தன் ரசிகர் நற்பணி மன்றத்தை கூட்டி, ரசிகர்கள் அனைவரையும் நேரில் சந்தித்துள்ளார். ரசிகர்களை நேரில் சந்தித்த தன் மனதில் பட்ட பல விஷயங்கள் வெளிப்படையாக பேசி உள்ளாராம். சினிமாவில் அடுத்த கட்ட நகர்வுக்கான விஷயங்களை பற்றியும், தன் மனதில்பல வருஷமாக ஒளித்து வைத்திருக்கும் கசப்பான விஷயங்களையும் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

தற்போது இவர் ரசிகர்களை சந்தித்தது, விஜய் அவர்கள் அரசியலில் முழு நேரமாக ஈடுபட உள்ளேன் என்று தெரிவித்ததும், அடுத்த தளபதி யார் என்று பலரும் பேசி வந்த நிலையில், சிவகார்த்திகேயன் பெயரை பலரும் எழுப்ப ஆரம்பித்தார்கள். அதைத்தொடர்ந்து தான் சிவகார்த்திகேயன் அவர்கள் இதுபோல் விஷயங்கள் செய்து வருகிறான் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top