ஒரே ஒரு கையெழுத்தால் ஒட்டுமொத்த மானத்தையும் கப்பல் ஏத்திட்டா… கதறும் விஜயா… கோவத்தின் உச்சத்தில் முத்து… ப்ரோமோ…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.  இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. கோயிலில் யாருக்கும் தெரியாமல் திருட்டு திருமணம் செய்து கொண்டனர் ரவி ஸ்ருதி. சாட்சி கையெழுத்து  போட்டு வந்து மாட்டிக் கொண்டார் மீனா. இதைத்தொடர்ந்து அண்ணாமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் உள்ளனர்.

   

இந்நிலையில் கோவிலுக்கு சென்ற போலீஸ் ஒருவர் உண்மையை அறிந்து வந்து அங்கு கூறுகிறார். அங்கிருந்த உயர் அதிகாரி ‘ இங்க யாரு மீனா?’ என்று கேட்க ‘என் பொண்டாட்டி தான் சார்’ என்று முத்து சொல்கிறார். அவங்க தான் சாட்சி கையெழுத்தை போட்டு இருக்காங்க. என்று போலீஸ்காரர் கூற ‘அப்படியெல்லாம் செய்ய மாட்டா சார்’ என்று முத்து கூறுகிறார். இதைத்தொடர்ந்து விஜயா ‘மீனாவிடம் என் குலத்தை அழிக்க வந்தவடி நீ .உன் புத்திய காமிச்சிட்டியா.’ என திட்டுகிறார்.

அண்ணாமலையிடம் சென்று ‘எப்படி பண்ணி வச்சிருக்கா பாருங்க.இவதான் நம்மப்புள்ளைக்கு  கல்யாணம் பண்ணி வைச்சிருக்க.  நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா. இப்ப நம்ம எல்லாரையும் கொண்டு வந்து எங்கு நிறுத்தி இருக்கான்னு பாத்தீங்களா ‘ என ஆவேசமாக கத்துகிறார். இதை தொடர்ந்து முத்து மீனாவிடம் கோபமாக ‘நீ சாட்சி கையெழுத்து போட்டையா?’ என்று கேட்க மீனா கையெழுத்து போட்டதாக ஒப்புக்கொள்கிறார். கோபமான முத்து மீனாவின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

இதைத் தொடர்ந்து ரோகினி ‘ இது எல்லாத்துக்குமே நீங்கதான் காரணமா? செய்வதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறீங்க’ என்று சந்துல  சிந்து பாடுகிறார்.  முத்து மீனாவிடம் ‘ உன்ன பாத்துக்கோன்னு சொல்லி விட்டுட்டு போனா என்ன பண்ணி வச்சிருக்க. உனக்கு இவ்ளோ தைரியம் எங்க இருந்து வந்துச்சுன்னு’ கோபமாக திட்டுகிறார். இப்படி பரபரப்பாக இன்றைய நாளின் பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…