CINEMA
அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது வழக்கம் தான். இயக்குனர் கதை எழுதும் போதே இப்படத்தில் இந்த நடிகர் நடித்தால் சரியாக இருக்கும் என்று எண்ணி எழுதுவார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை, சம்பளப் பிரச்சனை என சூழ்நிலை காரணமாக அந்த நடிகர் நடிக்காமல் போக வாய்ப்புள்ளது.
வேறு வழியின்றி வேறு ஒரு நடிகரை அந்த இயக்குனர் தேடுவார். அப்படி ஏராளமான படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. சில படங்கள் பிளாப்பும் ஆகி இருக்கின்றது. நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் பலக்காலம் முன்னரே பகலவன் என்ற ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இது முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படம் இது.
விஜய்க்காக தான் எழுதப்பட்டது என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் பேசியிருந்த போதும் எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. எங்க இரண்டு பேருக்குமே இந்த படம் செட்டாகாது. அதனால் படம் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் பகலவன் படத்தை எடுத்தால் நான் கண்டிப்பாக சிம்புவை வைத்தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் விஜய் தற்போது அரசியலில் நுழைவது உறுதி ஆகிவிட்டது. இவரின் கடைசி படம் கண்டிப்பாக ஒரு அரசியல் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வேலை பகலவன் கதையில் கூட நடிக்க வாய்ப்பு இருக்கின்றதா? என்று சீமானிடம் மறுபடியும் கேட்கப்பட்டது. ஆனால் சீமான் இந்த படத்தை நான் எடுத்தால் கண்டிப்பாக அதை சிம்புவை வைத்து தான் எடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.