CINEMA
தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை அந்த அளவுக்கு கில்லி ரீ ரீலிசை மக்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. விஜயின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது கில்லி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். இப்பொழுது விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை எம். ரத்தினம் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் மக்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ஆட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இப்படத்தின் இயக்குனரான தரணியை சமீபத்தில் விஜய் சந்தித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக மூன்று முறை விஜயை சந்திக்க முயற்சி செய்திருக்கின்றார். விஜய் அவரை சந்திக்காமல் தவிர்த்து இருக்கின்றார். காரணம் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் இறங்க இருக்கின்றார். இதற்கிடையில் விஜய் கோட் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கின்றார்.
விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் தான் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தரணி தன்னிடம் கால்சீட் கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் தான் விஜய் அவரை சந்திக்காமல் இருந்திருக்கின்றார். மேலும் கில்லி படம் இப்போது ரீ ரிலீஸாகி சக்க போடு போட்டு வரும் நிலையில் இப்படத்தின் சுவாரசியமான நிகழ்வுகளை தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் மற்றும் தாரணி பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மாலை மரியாதை உடன் விஜயை சென்று பார்த்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.