தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பு இருந்தது. படக்குழுவினரும் மலேசியா வரை ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு ஓவர் பில்டப் செய்து வந்தனர். ஆனால் கங்குவா வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரத் தொடங்கியது. பலரும் பலவிதமாக விமர்சித்தனர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ் மற்றும் ட்ரோல் போன்றவை வைரலாகியது.

கங்குவா படத்தை போட்டு இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா நேற்று கங்குவா திரைப்படம் பற்றியும் சூர்யா பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இப்படியான நிலையில் பிரபல பாடகி சுசித்ரா நடிகை ஜோதிகா முன்வைத்த கருத்தை தொடர்ந்து அவருக்காகவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா ஜோதிகாவை நேரடியாக தாக்கி அவர் பேசியுள்ள விஷயங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில், ஜோதிகா கூப்பிட்டாங்கன்னு தமிழ்நாட்டை விட்டுட்டு கூடவே மும்பைக்கு போய்ட்டீங்களா சூர்யா. அதுக்கு எங்க பசங்களுக்காக என்று ஜோதிகா பொய் சொன்ன போது அந்த பொய்ய சூர்யாவும் சொல்லி சமாளித்து விட்டார். தமிழ் ரசிகர்களாகிய நீங்கள் கேட்க மாட்டீங்களா, அப்படி தமிழகத்தில் கிடைக்காத உயர்ந்த கல்வி பாம்பேவில் என்ன கிடைச்சிடப் போகுது. தமிழ்நாடு எங்க பசங்களுக்கு சரியில்லை என்று பாம்பேக்கு கிளம்பி போய் இருக்காங்க. இதை வெளியில சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லையா. நீங்க அந்த அளவுக்கு ஜோதிகா மயக்கத்தில் இருக்கீங்களா சூர்யா.

அந்த லெட்டரில் ஜோதிகா எழுதியிருக்க ஒவ்வொரு வார்த்தையும் என்ன குத்துது. இதை எப்படி ஒரு பொண்டாட்டி புருஷனுக்கு சப்போர்ட் பண்ற லெட்டரா பார்க்க முடியுது. இது எல்லாரையும் காக்கா புடிக்கிற லெட்டர். நீங்க சங்குவாவை சரியாக பேசவில்லை என்றால் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன் என்று ஜோதிகா சொல்றாங்க, இதனால யாருக்கு நஷ்டம் உங்களுக்கு தான் நஷ்டம். யாரும் வன்மத்தோடு கங்குவாவை விமர்சிக்கவில்லை, ஒரு வருத்தத்தோடு தான் விமர்சித்துள்ளனர் என்று நடிகை ஜோதிகாவை பாடகி சுசித்ரா விமர்சித்துள்ளார்.
