#image_title
நடிகர் ஜான் விஜய் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் தலைமகன், ராவணன், தில்லாலங்கடி, அங்காடி தெரு, கலகலப்பு, நேரம், வாயை மூடி பேசவும், திருடன் போலீஸ், சகலகலா வல்லவன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து குரல் எழுப்புகிறார். பல பிரபலங்கள் பற்றியும் சின்மயி இதுவரை பல புகார்களை கூறியிருக்கிறார். இந்த நிலையில் வில்லன் நடிகர் ஜான் விஜய் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியதாவது, நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப்புகள் மற்றும் பப்புகளுக்கு ரெகுலராக வருவார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கத்தில் தொடர்ந்து பேசுவார். அவருக்கு NO சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். தான் ஒரு செலிபிரிட்டி என்பதால் yes சொல்ல வேண்டும் என நினைப்பார்.
#image_title
அவர் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு கொடுப்பார். பேசுவதற்கு கூட விருப்பமில்லை என கூறினாலும் பல பெண்களுக்கு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். இதனை பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…