“என் இதயத்தை துளைத்து விட்டாய்..” நீரில் மூழ்கி இறந்த மகள் குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட உருக்கமான பதிவு.. வைரல்..

By Begam on மார்கழி 18, 2023

Spread the love

மனதை வருடும் குரலுக்கு சொந்தக்காரரான பாடகி சித்ராவை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் ‘சின்னக்குயில் சித்ரா’ என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளும் 25,000 பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 6 முறை தேசிய விருதையும் வாங்கியுள்ளார் பாடகி சித்ரா.

   

தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக விளங்கி வருகிறார். பாடகி சித்ரா அவர்கள் 1988ல் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002ல் நந்தனா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆர்ட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை. இக்குழந்தையின் மீது சித்ரா அவர்கள் அதிக அன்பு செலுத்தி வந்தார். தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார்.

   

 

2011ல் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது தனது மகளையும் அழைத்து சென்றார். அங்கு நந்தனா நீச்சல் குளத்தில் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துவிட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த விபத்து தற்போது சித்ரா அவர்களின் மனதில் தற்பொழுது வரை நீங்காத வடுவாக உள்ளது. வருடந்தோறும் தனது மகளின் பிறந்தநாளன்று சித்ரா உருக்கமான பதிவு வெளியிட்டு வருந்துவார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா’ என்று குறிப்பிட்டு வருந்தியுள்ளார். இதோ அவரின் பதிவு..

#image_title