ரெடின் கிங்ஸ்லி முதல் விக்ராந்த் வரை… சீரியல் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட வெள்ளித்திரை பிரபலங்கள்… 

By Begam

Published on:

சினிமாத் தியுரையில் நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்பொழுது வழக்கமாகி விட்டது. அந்த காலம் முதல் தற்பொழுது வரை அப்படி பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது சின்னத்திரை நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொண்ட வெள்ளித்திரை பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா:

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சங்கீதா. இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர்  ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா,  A1 , டாக்டர்  பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா

இவன் வேற மாதிரி, நாயகன் தொடரி என பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.  தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி:

தயாரிப்பாளர் ரவிந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. இந்த திருமணத்தால் இவர்களிருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தனர். அனைத்தையும் கடந்து தற்பொழுது மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஜோடி.

சஞ்சீவ் வெங்கட் – பிரீத்தி:

நடிகர் சஞ்சீவ் வெங்கட் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் இவர் நடித்த திருமதி செல்வம் சீரியல் இவருக்கு என்ன ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்/ இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

ஸ்ரீகுமார் -சமீதா:

ஸ்ரீகுமார் – ஷமிதா இவர்கள் இருவரும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இது மட்டுமின்றி பல்வேறு  சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றனர். நடிகர் ஸ்ரீகுமார்  ஷமிதாவை 2010ல் திருமணம் செய்து கொண்டார். ‘பாண்டவர் பூமி’ படத்தில் நடித்து  பிரபலமானவர் நடிகை ஷமிதா. இதை தொடர்ந்து எந்தவொரு படங்களிலும் நடிக்காத இவர், தற்பொழுது சின்ன திரையில் மட்டும் கலக்கி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் நடிகர்.

சாந்தனு – கீர்த்தி:

நடிகர் சாந்தனு  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். கீர்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

விக்ராந்த் -மானசா:

கற்க கசட, கோரிப்பாளையம், வெண்ணிலா கபடி, குழு லால் சலாம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்ராந்த். இவரது மனைவி மானசா உதிரி பூக்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.