“மாஸ்டர் என்ன விட்டுருங்க”… 15 வயது சிறுமியை தனியாக வீட்டுக்கு அழைத்துச் சென்று… சிலம்பம் மாஸ்டர் செய்த கொடூரம்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்ராயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவருடைய மகன் பெரிய அப்பணசாமி (37). இவர் அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட பலருக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வருகின்றார். அதன்படி விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று பெரிய அப்பணசாமி வழக்கம் போல சிலம்பம் பயிற்சி அளித்துள்ளார். அப்போது அவர் அங்கு பயிற்சி பெற்ற 15 வயது சிறுமி ஒருவரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து பலமுறை அந்த சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை விளாத்திகுளத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. சிலம்பம் பயிற்சியாளரை தற்போது போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெற்றோர்களும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.